LIVE
கோவையில் இன்று

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

Admin
Today
1.2K Views

வாகனத்தில் சுற்றும் ‘ஆடு திருடும் கும்பல்’ கோவை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் அதிகமாகி விட்டது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், மதுக்கரை, செட்டிபாளையம், கோவில்பாளையம், அன்னூர் வட்டாரங்களில் ஆடுகள் காணாமல் போவதாக புகார் அதிகமாகியுள்ளது. மாவட்டத்தில் தினமும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. வேன், டெம்போ போன்றவற்றில் ஆடு திருடும் கும்பல் நள்ளிரவில் சுற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆட்டை திருடி அதிகாலை நேரத்தில் மட்டன் கடையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆடுகளுக்கு அதிக தொகை கிடைப்பதால், இரும்பு திருட்டு, வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு, நகை திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கூட தற்போது ‘ஆடு களவாடுவதில்’ ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. ஆடு திருடும் கும்பல் கையில் கத்தி, அரிவாள் வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் விரட்டி வந்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டி தப்புவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. போலீசார் நள்ளிரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி ஆடு திருடும் கும்பலை பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related News

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...